Facebook Badge

Wednesday, March 27, 2013

இமயமலையில் ஹர ஹரி [கேதார்/பத்ரி] அனுபவம் - பாகம் 3

 - இறை - இது - அனுபவம்

ஒரு உணவகத்தில்  கிடைத்ததை  சாப்பிட்டு  சிறிது ஓய்வெடுத்து  மீண்டும்  நடக்க  ஆரம்பித்தோம் . அப்போது.......
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஆரம்பித்தது  மழை.
அடுத்த  7 கிலோ மீட்டர்களும்  மழையில்  நனைந்தபடி  மலை  ஏறுகின்றோம்.  
இரவு  7.15 க்கு  திருக்கேதாரம் வந்து சேர்ந்தோம்.....
அங்கேயே அறைகளை பேரம் பேசி பதிவு செய்து...கொண்டு சென்ற பொருட்களை வைத்துவிட்டு....அனைவரும் வந்து சேர காத்திருந்தோம். குழந்தைகளும் முதியவர்களும் பெண்டிரும் மிகுந்த அசதியினாலும் [14 கிலோ மீட்டர்கள் வெயிலிலும் மழையிலும் நடந்தே வந்தனர்]கசகசப்பினாலும், மிகுந்த குளிரினாலும் அறைக்குள் ரஜாய்[மெத்தை போர்வை ] போத்தியபடி அடைந்துகொண்டனர்..... 
இமாலய பயணம் என்பது இதுதானே......
இவ்வளவு உடல் வருந்தி இறை தரிசனம் பெரும் பாக்கியம் அவர்களுக்கு கிடைத்துள்ளதே.......என்று நினைத்தவாறு
நானும் ஒரு சில நண்பர்களும் மட்டும் உடனே  தரிசனத்திற்கு  புறப்பட்டோம் . இரவுமணிக்கு  கோயில்  நடைசார்த்திவிடுவர்களாம்.
வலியுடன், மழையில் வேக வேகமாக கோவிலை நோக்கி செல்கிறோம்....
.
.
.
.

அதோ கோபுரம்......

.
.
.
தென்னாடுடைய சிவனே போற்றி....என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி....போற்றி.....
.
.
.
.

கைகளை உயர்த்தி வணங்கியபடி...... ஒம் நமசிவாய.....ஒம்
நமசிவாய.......ஜெய் கேதார்நாத்கி ஜெய்......

நாங்கள்  ஆலயத்திற்குள்  நுழையும்போது   7.40 மணி
அன்றைய தின கடைசி  கால பூஜை  நடைபெற்றுகொண்டிருந்தது .
.
.
.
.

ஆஹா....அதோ இறைவர்...... 
.
.
வா...
.
.
வா....
.
.
.

இதோ அனுபவம்..........என்றார்....
அந்த  பூஜையை  பரவசத்துடன்  கண்டோம் .
சுற்றிலும்  ஜெய்  போலேநாத் , ஜெய்  கேதாரிநாத் , ஓம்  நமசிவய  என்ற  சைவ மந்திரம் மங்கள ஒலி.....
மிகுந்த  திருப்தியோடு  வெளியே  வந்தோம் . புகைப்படம்  எடுத்து  கொண்டோம்
அறைக்கு திரும்பினோம். ஜீரோ   டிகிரி  செல்ஷியஸ்  என்று  யாரோ  சொன்னார்கள் . மழை பொழிந்ததால் குளிர்  தெரியவில்லை . தூங்கினோம் . இரவு  மழை விட்டது . பனி  பொழிய  ஆரம்பித்தது .

உடன் வந்த அனைவரும் தூங்கிவிட்டனர்.....
அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் கோவிலுக்கு சென்று இறைவரை தரிசித்து வந்து விட்டதால், இறைவரின் கருணையையும் அலங்காரத்தையும் நினைத்தபடி,
நாங்கள்  அசதியில்  தூங்கிவிட்டோம்.

மறுநாள்...........
.
18.08.2010 
அதிகாலை  5  மணிக்கு  எழுந்து அனைவரையும்  எழுப்பி  கிளம்ப  சொல்லி  வெளியே  வந்து  பார்த்தால் , கோயிலுக்கு  பின்னால்  மலை  முழுவதும்  பனி  பொழிந்து  பனிமலையாக  காட்சி  அளித்தது
ஆகா  என்ன  ஒரு  கண்கொள்ளா காட்சி[கண்ணதாசனின் வரிகள் ஞாபகத்திற்கு வந்தது.] இந்த அனுபவமே கடவுளாக நினைத்து..... . 
கோயிலுக்கு  அருகில்  உள்ள  கடைகளில் பூஜை பொருட்கள்  வாங்கி  மீண்டும்  கோயிலுக்குள்  சென்றோம்
பண்டிட்  எனப்படும்  அர்ச்சகர்கள் எங்களை  அணுகி  பூஜை  செய்வதாக சொன்னார்கள். அவர்களோடு  கோயிலுக்கு  உள்ளே  சென்றோம்
இங்கு  ஒரு  சிறப்பு என்னவென்றால் நம்மை  கர்பக்ரகத்திற்க்குள் அழைத்து  சென்று  நம்மையே  பூஜை  செய்ய  சொல்கிறார்கள்
நாங்களும்  இருவர்  இருவராக  கேதாரநாதரை தொட்டு பூஜை செய்தோம். இங்கும் பரவசம். இங்குதான்  இது(நான்) இறைவனை  உணர்ந்தது.
இதற்க்காகத்தானே இப்பயணம்.
உம்மை தழுவிக்கொள்ளத்தான  இத்தனை  தூரம்  கடந்து  வந்தேன்.நன்றி  அய்யா  நன்றி.
எங்கள் குழுவினர் அனைவரும் மிக திருப்தியாக இறை தரிசனம் பெற்றனர்....அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகள்.............குழந்தைகள்.....முதியோர் அனைவரும் குதுகலத்துடன் கோவில் நடை சுற்றி வந்தோம்.....
பூஜை  முடித்து  அனைவரும்  வெளியே  வந்து  கோயிலுக்கு  பின்னால்  உள்ள  குரு  ஆதிசங்கரர்  ஆலயத்திற்கு  சென்றோம்
அங்கு  5 நிமிட  தியானம் செய்தோம். மீண்டும்  கோயிலுக்கு  வந்து  புகைப்படம்  எடுத்துகொண்டோம்
 கோவில் கோபுரம்
 தம்பி செந்தில், மனைவி கார்த்திகா மகன் தேவேஷ்வரன்
 நண்பர் எத்திராஜன், மனைவி பிரியா மகள்கள் சந்தியா சௌந்தர்யா[எக்ஸ்ட்ரா டிக்கெட்.......]



கோவில் முன் நான் ....
.
.
.
.
.
.
.
.
.

கோயில்  முழுவதும்  சாமியார்கள் . அகோரிகள் . முனிவர்கள் . சித்தர்கள் ,யோகிகள் இருந்தார்கள்.
.
.
.
.
அங்கே அகோரிகள் தலைவராக ஒரு குருஜி காணப்பட்டார்...[நான் கடவுள் திரைபடத்தில் அகோரி குருவாக காசியில் காணப்படுபவர் - அஹம் பிரம்மாஸ்மி என்று கூறுவாரே.....அவர்தான்]
ஆகாயத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தார்.........பார்த்து சிலிர்த்தோம்.....
எங்கள் குழுவில் வந்த இருவர் அவருக்கு காணிக்கை அளிக்க முயற்சி செய்தபோது.....அவர் அதை மறுத்து ஏதோ பாஷையில் கோவிலை நோக்கி செல்லும்படி கூறினார்.
[இறைவன் உண்டியலில் சேர்க்கும்படியும், அவரை கும்பிடும்படியும் தன்னை கும்பிடவேண்டாம் என்று கூறுவதாக எங்களுக்கு புரிந்தது.....]
.
.
மிக சரி......எனவேதான் அவர் குருவாக உள்ளார்....நாம் அவரை நோக்கி கை தொழுகிறோம்..........
அனைவரிடமும்  ஆசி பெற்று  அறைக்கு  வந்து  9 மணிக்கு  கிளம்பினோம். நண்பர் எத்திராஜன் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் அங்கேயே ஒரு மருத்துவரிடம் காண்பித்து வந்தார்.
உடன் வந்த அனைவரும் சுவாமி படங்கள், பொருட்கள் என்று வாங்கினர்.[நானும் இறைவர் படங்கள் வாங்கினேன்]
நண்பரின்  அப்பா , அம்மா , மனைவி , குழந்தைகள் , தம்பி  மனைவி, மகன் தேவேஷ்வரன்  அனைவரையும்  குதிரையில்  ஏற்றி  அனுப்பி வைத்துவிட்டு,  மறுமுறை வரும் வரத்தை அருள எல்லாம்வல்ல திருக்கேதார நாதரை பணிந்து இறங்க மனதில்லாமல் நாங்கள்  திருக்கேதார மலையை விட்டு இறங்க ஆரம்பித்தோம்
9.15 க்கு  மலையில்  இருந்து  இறங்க ஆரம்பித்தவுடன்  பிடித்தது மழை
அனைவரும் நனைந்தபடியே சீக்கிரமாக கௌரிகுண்டதை நோக்கி  நடந்து  சென்றடைந்து  விட, நானும்  எனது  அண்ணனும்  அண்ணன்  மகன்  சிவ  வர்னேஷ்வரும்  4.30 மணிக்கு  கௌரிகுண்டதிர்க்கு  வந்தடைந்தோம்
பத்ரிநாத தரிசனம் காண 5 மணிக்கு எங்கள் சிற்றுந்தில்  பத்ரிநாத்  நோக்கி பயணப்பட்டோம். 7.45 மணிக்கு சந்திரபுரி என்ற ஊரில்  ஒரு விடுதியில் அறை வாடகைக்கு எடுத்து தங்கினோம். அங்கேயே உணவு உண்டு, இறைவர் பத்ரினாதரை தரிசிக்கபோகும் ஆவல் மனதில் நிறைந்து நிற்கதிருக்கேதார மலை இறங்கி வந்த களைப்பு தீர தூங்கினோம்........
.
.
.
.
.
.
மறுநாள்.......பத்ரிநாதர் தரிசனம்.....
.
.
.
.
.கடைசி பாகம் நாராயணன் பெருமையில் தொடரும்.....