"மூணு பசங்களையும் நல்லா பாத்துக்கங்கம்மா...அடிக்கடி வீட்டுக்கு வாங்க....ரங்கநாதர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும்போது அப்படியே இந்த வீட்டுக்கும் வந்து போங்க..."என்று கூறிய அந்த வீட்டு ஒனரம்மாவிடம், "நிச்சயம் வரேங்க" என்றவாறே புது வாடகை வீட்டுக்கு தனது மூன்று பசங்களையும் அழைத்துக்கொண்டு நடந்தார் தேவியம்மா.
கீழ் தளத்தில் ஐந்து குடித்தனங்களும் மேல் தளத்தில் வீட்டு ஒனரம்மாவும் குடியிருந்த அந்த முகப்பு ஒட்டு வீட்டிற்கு தனது எதிர்காலத்தை வாழ்ந்து பார்க்க குடிவந்த அந்த அம்மாவுக்கு அப்போது தெரியவில்லை அவரது எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்கப்போவதில்லை என்று...[யாருக்குத்தான் தெரியும்]...
ஓட்டில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடி வழியே வீட்டினுள் பாய்ந்த சூரிய ஒளி போல வாழ்வு மலருமென்று தேவியம்மா நினைத்துக்கொண்டிருந்த அதே வேளையில் அவரது கணவர் தனது வாழைப்பழக்கடையில் சோகமாக "என்னப்பா இப்படி நஷ்டம் ஆகிடுச்சே " என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்..."உடுப்பா உனக்கென்ன மூணும் ஆம்பளப்பசங்க தானே...சொத்தா செத்து வைக்கப்போற...கவலைப்படாதே...வா குடிக்கப்போவோம்...கவலைய மற" என்று அழைத்த நண்பருடன் சென்ற தேவியம்மாவின் கணவருக்கு அப்போது தெரியவில்லை...அந்த மது, அவரின் வாழ்வின் கடைசி நாள் கடைசி நொடி வரை அவருடன் வாசம் புரியப்போகிறது என்று...
கீழ் தளத்தில் ஐந்து குடித்தனங்களும் மேல் தளத்தில் வீட்டு ஒனரம்மாவும் குடியிருந்த அந்த முகப்பு ஒட்டு வீட்டிற்கு தனது எதிர்காலத்தை வாழ்ந்து பார்க்க குடிவந்த அந்த அம்மாவுக்கு அப்போது தெரியவில்லை அவரது எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்கப்போவதில்லை என்று...[யாருக்குத்தான் தெரியும்]...
ஓட்டில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடி வழியே வீட்டினுள் பாய்ந்த சூரிய ஒளி போல வாழ்வு மலருமென்று தேவியம்மா நினைத்துக்கொண்டிருந்த அதே வேளையில் அவரது கணவர் தனது வாழைப்பழக்கடையில் சோகமாக "என்னப்பா இப்படி நஷ்டம் ஆகிடுச்சே " என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்..."உடுப்பா உனக்கென்ன மூணும் ஆம்பளப்பசங்க தானே...சொத்தா செத்து வைக்கப்போற...கவலைப்படாதே...வா குடிக்கப்போவோம்...கவலைய மற" என்று அழைத்த நண்பருடன் சென்ற தேவியம்மாவின் கணவருக்கு அப்போது தெரியவில்லை...அந்த மது, அவரின் வாழ்வின் கடைசி நாள் கடைசி நொடி வரை அவருடன் வாசம் புரியப்போகிறது என்று...

No comments:
Post a Comment